ஓ நந்தலாலா !
காக்கைச் சிறகினிலே
உன் கருமை நிறம்
கண்ணுக்குத் தெரிந்ததாம்
அந்த கவிராஜனுக்கு.
ஓ ப்ரியசகி !
எனக்கோ … .. ..?
உன்னுடன் நான்
பகிர்ந்துக் கொண்ட
அந்த
காக்காய்க் கடி ..
கடவாய்ப் பல்லில்
காலங் காலமாய்
கனிந்தூறிக்
கொண்டிருக்கும்
அந்த
கமர்க்கட்டு
தித்திப்பு.
அப்துல் கையூம்
vapuchi@hotmail.com