கையூமின் கவிதைகள் தெரிவுக்கான தொகுப்பு

Posted in கையூமின் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyum

imagescaf024u3.jpg

தேடல்கள் .. ..

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

பூஜ்ஜியம்

Posted in கையூமின் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyum

அன்று
எண்களுக்கும் 
எனக்குமிடையே
காரசார விவாதம்

பூஜ்யத்திற்கு
எதிராக
எண்களெல்லாம்
அணிதிரள

இலக்கங்கள்
விளக்கங்கள் வேண்டி
தர்க்கங்கள் செய்தன

எத்தனை பூஜ்ஜியமோ
அத்தனையும் சேர்ந்தாலும்
பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான்
பொரிந்து தள்ளியது எண்கள்

பூஜ்ஜியம் இல்லாவிடில்
கணிதமே பூஜ்ஜியம்
எடுத்து வைத்தேன்
என் தரப்புவாதத்தை

திறந்த மேனியாய்
நிராயுதபாணியாய்
ஒற்றையாய் நின்ற
உயர்வுமிக்க
பூஜ்ஜியத்தை
புகழ்ந்து பேசினேன்

பூஜ்ஜியமே ..

உன் வெற்றிடமும்
எனக்கு
முழுமையாகவே
தெரிகிறது.

காலியானவன் நீ
காலாவதி ஆகாதவனும் நீ

நிறைவும் நீ
நிர்மூலமும் நீ

சூன்யம் நீ
என்றார்கள்

சூத்திரதாரியே
நீதானென்ற
சூட்சமத்தை
அறியாதவர்கள்

நீ
ஒளிவு மறைவு
இல்லாதவன்

அதனால்தானோ
உன் மதிப்பு
உலகுக்குத் தெரியவில்லை?

உள்ளொன்று வைத்து
புறமொன்று
பேசுபவர்க்குத்தானே
உலகத்தில் மரியாதை?

ஒவ்வொருத்தரின்
வெற்றிக்கு பின்னாலும்
ஒருவர் உண்டாம்

இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது

ஒன்றுமே இல்லாத உன்னாலே
உயரத்தில் அவர்களை
உட்கார்த்த முடிகிறது

நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்

அகிலத்தில் உன்னை
அறிமுகம் செய்தது
ஒரு இந்தியன்தானாம்
 
அதனாலோ என்னவோ
உன் மேல் எனக்கு
அளப்பரிய பிரியம்
 
ஆன்மீகத் தேடல்
உன்னிலிருந்தே தொடங்குகிறது
உன்னிடத்தே முடிவடைகிறது

உருவமுள்ளவனும் நீ
உருவமில்லாதவனும் நீ

ஆதியும் நீ
அந்தமும் நீ

ஆக்கமும் நீ
அழிவும் நீ

உன்னை
முற்றும் உணர்ந்தவர்கள்
சூஃபிகள் ஆனார்கள்
துறவிகள் ஆனார்கள்
முனிவர்கள் ஆனார்கள்

அறியாதவர்கள்
பூஜ்யமாகிப் போனார்கள்

உன்னிலிருந்து
பிறந்ததுதான் பிரபஞ்சம்
உன்னிலேயே
முடிவடையும் அது திண்ணம்

ராஜ்ஜியம் ஆண்ட
மாஜிகளெல்லாம்
ஆணவத்தால்
பூஜ்ஜியமாகிப் போனது
கண்கூடு

நீ
இறைவனுக்கும்
நெருக்கமானவன்

பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியம் அமைத்தது
அவன்தானே?

பூஜ்ஜியமாய் இருந்துக்கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனும்
அவன்தானே?

மனிதனின் வாழ்வு
பூஜ்ஜியத்திலிருந்தே
தொடங்குகிறது

பூஜ்ஜியத்திலேயே
முற்றுப் பெறுகிறது

எண்களுக்கு மாத்திரம்
நீ தொடக்கமல்ல

எல்லாவற்றிற்கும்
நீதான் தொடக்கம்
எல்லாவற்றிலும்
நீ அடக்கம்

உன்னை
சூன்யம் என்றவர்களை
சுட்டுவிடத் தோன்றுகிறது

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

நன்றி : திண்ணை (17.1.2008)

தேடல்கள் .. ..

Posted in கையூமின் கவிதைகள் on ஜனவரி 18, 2008 by abdulqaiyum

(மே 2006-ல் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தில் தேடல்கள் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதை)

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

இது அடுக்குமா..?

Posted in கையூமின் கவிதைகள் on நவம்பர் 23, 2007 by abdulqaiyum

orator.jpg

வெள்ளையும்                                                  சள்ளையுமாய்                                                      வெளியே                                                            நடமாட்டம்.

சுத்தம்                                                           சட்டையில் மட்டும்                                           இருந்தென்ன லாபம் ?

சட்டைப்பைக்கு                                            சமீபத்திலுள்ள                                              சதைத்துண்டில் அல்லவா                                      வேண்டும் ?

மேடையில்                                                          அவருக்கு                                                            எடைக்கு எடை                                               நாணயமாம்.

அவரது                                                       நாணயத்திற்கு                                                    எடைக்கு எடை                                                        தரச் சொன்னால்

ஒரே ஒரு நாணயம்                                              தேறுவதே சந்தேகம்.

செப்படி வித்தையில்                                         சொல்லுவான்                                                  வாயிலிருந்து                                                          குருதி கொட்டுமென்று

இவர்களின்                                                              சொல் வித்தையில்                                                     வாய் திறந்தால்                                                வாக்குறுதிகள் அல்லவா                                    கொட்டுகிறது ?

ஏப்பம் விடுவது                                               இவர்களுக்கு                                                      எளிதான கலை.

மேடையில் சோடா ..                                             மற்றவை தெரிவதில்லை.

இவர்கள்                                                              துண்டு போடுவது                                                  தோளில் மட்டுமா ?

நாட்டையும்தான்                                              நம்மையும்தான்.

அடுக்கு                                                       இவர்களுக்கு பிடிக்கும்

அடுக்கு மொழிகள்

அடுக்கடுக்காய்                                                 பணக்கட்டு

அடுக்குமாடிக்                                                 கட்டிடங்கள்

இது                                                               அடுக்குமா என்று                                         கேட்காதீர்கள் ..!

          – அப்துல் கையூம்

எடை

Posted in கையூமின் கவிதைகள் on நவம்பர் 23, 2007 by abdulqaiyum
astonaut.jpg 

நிலவில்                                                              மனிதன்                                                                   எடை                                                          இழப்பானாம்.

இதிலென்ன                                                   ஆச்சரியம் ?

நிலவே !

உன்னிடத்தில்                                                      என்னை நானே                                       இழந்திருக்கேனே.. ?

         - அப்துல் கையூம்

ஆயுட் கைதி

Posted in கையூமின் கவிதைகள் on நவம்பர் 23, 2007 by abdulqaiyum

imagesca63moec.jpg                                                                         என்னருமை                                                                                    சட்ட வல்லுனர்களே ! 

வாழ்நாள் முழுவதும்                                                                      ஜாமினில்                                                                                                வெளிவரவே முடியாத                                                                        ‘தடா’ சட்டம்                                                                                      ஏதாவதிருந்தால்                                                                                        தயவு செய்து சொல்லுங் கள்.                                                     

கடந்து போன                                                                                   என்                                                                                               இளமைக்கால                                                                                                              இனிய நினைவுகளை                                                                       

இதயச் சிறையில்                                                                          இரும்பு விலங்கிட்டு;                                                                         

ஆசை தீர                                                                                அடைத்து வைத்து;

ஆயுள் கைதியாக்கி                                                                         அழகு பார்க்க வேண்டும் !          

          – அப்துல் கையூம்

கலவரப் பகுதி

Posted in கையூமின் கவிதைகள் on நவம்பர் 21, 2007 by abdulqaiyum

police-riot.jpg 

கலவரப் பகுதியில்                                                                உன்                                                                             கன்னக் குழியையும்                                                 சேர்த்தாலென்ன ..?

களேபரம்                                                                        பற்றிக் கொண்டது                                                 எனக்குள்ளேயும் !

ரப்பர் குண்டுகளாய்                                                      கவசமேந்தா                                                                        என் இதயத்தை                                                       துளைத்தெடுக்கும்                                                                 உன் பொல்லாத                                                                கள்ளப் பார்வை !

‘கன்னி’வெடிகளாய்                                                               உன்                                                                            சின்னக் குறும்பு                                                         சிணுங்கள்கள் !

கண்ணீர்ப் புகையாய்                                                             உன் நினைவுகள்                                                                   என் மூச்சை முட்டும்

என் மனதுக்கு                                                                 எனக்கு நானே                                                           பிறப்பித்துக் கொண்ட                                                    ஊரடங்குச் சட்டம்

வன்முறை                                                                 தூண்டுதலை                                                              நிறுத்திவிடு; போதும்.

என்னை                                                                             என் கிடப்பில்                                                              அப்படியே                                                                        விட்டு விடு !

          – அப்துல் கையூம்

பொத்தான்

Posted in கையூமின் கவிதைகள் on நவம்பர் 9, 2007 by abdulqaiyum

button.jpg 

சட்டை

பொத்தானே ! 

உன்

மார்பினில் மட்டுமா

ஓட்டைகள் ? 

எங்கள்

இ.பி,கோ.

சட்டத்திலும்தான். 

விவாக

ரத்தொன்றே தொழிலாக

வேசித்தனம் புரியும்

வழக்குரைஞர்களுக்கு 

பிரிந்தவைகளை

ஒன்றிணைக்கும்

உன்

பேராற்றலை சற்று

புரியும்படி எடுத்தியம்பு

          -        அப்துல் கையூம்

தலையெழுத்து

Posted in கையூமின் கவிதைகள் on நவம்பர் 9, 2007 by abdulqaiyum

scribble.jpg 

என்ன லிபியோ                                                     யாருக்கும் தெரியாது !                                     

எழுதியிருப்பது என்ன                                               எதுவுமே புரியவில்லை !                                                 

புரியாத மொழியில்                                               புலப்படாத கிறுக்கல்.                                               

எழுத்தே தென்படாமல்                                                அது என்ன மையோ..?                                            

எழுதியதை மாற்ற                                                  இயலாத மை அது.                                        

எழுதியதும் அவனே !                                            அழிப்பதும்அவனே !                                                       

பொய்ப்பிக்காத                                                         ‘மெய் எழுத்து’ அது.                                                ‘உயிர் எழுத்தும்’ அதுவே.                  

தலையெழுத்து

உயிரினங்களுக்கு                                         மட்டும்தானா? 

கான மயிலாட                                                   கண்டிருந்த வான்கோழியாய்                                    

மனிதனும் எழுத                                            முற்படுகிறான் 

மகிழ்வுந்துக்கு                                                          எண் பலகை ! 

ஊர்களுக்கு                                                    பின்கோடு ! 

மாவட்டங்களுக்கு                                          தலைவர்களின் பெயர் ! 

நேற்று                                                                  இவன் வைத்த                                                           என் வீட்டு எண்                                                      பழைய எண் ஆகி                                                    இன்று பரிணாமம்                                                       புதிய எண் ! 

ஆனால்                                                                  ஒரே ஒரு வித்தியாசம் ! 

அவனது மாறுவதில்லை;                                           இவனது மாறி விடுகிறது. 

          அப்துல் கையூம்             

பள்ளிப் பாடம்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 29, 2007 by abdulqaiyum

barathiyar.jpg  

நாகூர்

செட்டியார் ஸ்கூலில்

நாயுடு சார்

நடத்துகிறார்

பாரதியார் பாடம்

“சாதிகள் இல்லையடி பாப்பா”

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

பேசும் கற்கள்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 28, 2007 by abdulqaiyum
tajmahal.jpg

அந்த கற்கள் பேசுமா? 

ஆம் .. பேசும். 

எத்தனைக் கோடி

மனிதர்களிடம்

இதுவரை அது

உறவாடியிருக்கும்? 

எண்ணிக்கையில்லை.. .. 

எத்தனை எத்தனை

மொழிகளில்

இதுவரை அது

உரையாடியிருக்கும்? 

ஏதும் தெரியவில்லை .. 

“என்னைப் பார்

என் அழகைப் பார்” என

எதார்த்தமாய் மொழியும்

ஏதோ ஒரு மொழி 

அது மட்டும் நிதர்சனம்.  

அம்மொழி செம்மொழி

நம்மொழி போல 

காலையில் ஒரு தொனி;

மாலையில் ஒரு தொனி;

முழுநிலவின்போது

மொழியும் அழகே தனி ! 

அன்று முதல்

இன்று வரை

மாறாத குரல் வளம் ! 

மாசுக் காற்றில்

குரல் சற்று

குன்றிப் போயிருக்கலாம்

அவ்வளவே.. 

உயிராயிருந்த அகலிகை

கல்லானது

புராணம் ! 

உயிரில்லாதகற்கள்

உயிரோட்டமானது

வரலாறு ! 

அது சாபம்

இது வரம் ! 

வரம் தந்தவன்

ரசனையுள்ள

முனிவன் போலும் ! 

தாஜ்மகாலே பேசு!

பேசிக் கொண்டே இரு.. 

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com 

போதை

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 25, 2007 by abdulqaiyum

canpnml1.jpg 

உளறும் குடிகாரனின்

ஒருவரி ஆத்திச் சூடி

“ஊக்கமது கைவிடேல்”

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

பாதளச் சாக்கடை

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 25, 2007 by abdulqaiyum

manhole.jpg

பாரதியே !

பிறநாட்டுச் சாத்திரங்கள்

பைந்தமிழில்

பெயர்க்கச் சொன்னாய்

ஆலைகள் செய்வோம்

நல்ல

சாலைகள் செய்வோமென்று

வீதியெங்கும்

பாதாளச் சாக்கடை

மூடியைப் பெயர்த்தெடுத்து

அப்படியே போட்டுவிட்டு

போய் விடுகிறார்கள்.

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

  

அறம் செய விரும்பு

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 25, 2007 by abdulqaiyum

jail.jpg

அறம் செய்தான்
அலக்காக கம்பியை
அறுத்தெடுத்தான் 
 
சிறையிலிருந்து
சுவரேறி
சீறிப் பய்ந்தான் 
 
அவ்வையின் அந்த 
ஆத்மார்த்த ரசிகன்            
 
அப்துல் கையூம்          
vapuchi@hotmail.com

துக்ளக்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 24, 2007 by abdulqaiyum

images-1.jpg 

துக்ளக் 

அன்றும் சரி

இன்றும் சரி

துக்ளக் ஆட்சிதானோ ? 

மழைக் கூட

‘சோ’வென்றுதான்

பெய்கிறது. 

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com   

அது ஒரு நிலாக் காலம்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 23, 2007 by abdulqaiyum

home-page.jpg

நிலாவில் மனிதன்
நிலையாகி விட்டான்

முதற் காலனி
முளைத்தது

மூத்த தலைவரின் பெயர்
முறையே சூட்டப்பட்டது

எட்ட இருந்து பார்த்ததை
தொட்டுவிட்ட அவர்களை

ஆயிரமாண்டுகட்குபின்
ஆதி மனிதர்களென

வரலாற்று பக்கங்கள்
வரையறுத்து காட்டும்

நிலா புராணங்கள்
நினைவு கூறும்

நிலாவில் குடியேறிய
முதல் திங்கள் அது

நிலா மனிதர்கள்
பூமிச் சோறுக்கு
உலா போயினர்

அன்று ..
சித்ரா பௌர்ணமி

அங்கிருந்து கொணர்ந்த 
அவர்களின் பஞ்சாங்கம்
அம்புலி கணக்கை
அளந்து காட்டியது

ஆஹா .. ..

அகன்ற வட்டமாய்
அற்புத காட்சி தந்தது
அந்த அழகிய பூமி

நிலாவுக்கு ஏற்பட்ட
அதே களங்கம்
பூமிக்கும்

புத்தம் புது அனுபவம்
புளகாங்கிதம் அடைந்தனர்
புது உலகத்து மனிதர்கள்

பூமியில் வசித்த காலத்தை
அசை போட்டது
அவர்களின் மனசு

அது ஒரு
நிலாக்காலம்

அங்கு விளையாடிய
அதே விளையாட்டை
இங்கும் ஆடினர்
இளஞ்சிறார்கள்.

அவர்கள் ஓட
அது ஓடியது

அது ஓட
அவர்கள் ஓடினர்

தொட்டில் குழந்தைகள்
தாய்மார்களiன் இடுப்புக்கு
தொற்றிக் கொண்டனர்

பூமியைக் காட்டியே
தொண்டைக்குள்
திணித்தனர் கவளங்களை

பூளோக ரம்பைக்கு
புடவை கட்டி பார்க்க
புதுக்கவிஞர்கள் புறப்பட்டனர்

ஆடை கட்டி
வந்த நிலவோ என
அழகு பார்த்தவர்களாயிற்றே?

நிலவைப்பாடி
நீர்த்துப் போன இவர்கள்
புதிய
உவமையையும்
உவமேயத்தையும்
உற்சாகமாகத் தேடினர்

இத்தனை நாள்
தாயாக இருந்த பூமி
இரவோடு இரவாக
இளமையாகிப் போனாள்

ஆம் … ..

பூமித்தாய்
பூமிக்கன்னியானாள்

மாறாக
நிலவுக் கன்னி
பொறுமையின் படிமம் ஆனாள்

காதலர்கள்
பூமியின் பொலிவை
கற்பனை கோர்த்து
கன்னியரை
வருணனை செய்தனர்

காதல் யுக்திக்கு
ஒரு புதிய
கிரியா ஊக்கி

நிலா நிலா ஓடிவா என்ற பாடல்
நர்ஸரி பாடத்திட்டத்தில்
நீக்கப்பட்டது

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
வானொலியில் ஒலிபரப்ப
தடை செய்யப்பட்டது

நிலா அது
வானத்து மேலே
பொருந்தாத பாடல்களென
பத்திரிக்கைகள் விமர்சித்தன 

புராணக் கதைகள்
திருத்தப்பட்டன
சந்திரனை
பாம்பு விழுங்கிய
பக்கங்களை தீயிலிட்டனர்

எங்கு நோக்கினும்
ராகு கேதுவுக்கு
எதிரான கோஷங்கள்

ஆம்ஸ்ட்ராங்குக்கு
ஆங்காங்கே
கோயில்கள்

அவன் திருவடி
பதித்த இடம்
பொற்பாதக்
கோவிலானது

சந்திர உடைகளில்
மந்திரம் கூறி
புரோகிதர்கள்
பூஜைகள் செய்தனர்

மூத்த குடியினருக்கு
முதல் மரியாதை
தந்தனர் அந்தணர்

அர்ச்சனைகள்
ஆம்ஸ்ட்ராங்கின் தாய்மொழி
ஆங்கிலத்தில் மட்டுமென
அறிவிப்பு வந்தது

மதவாதிகளும்
மிதவாதிகளும்
சரிபாதி பிரிந்தனர்

பகுத்தறிவு
பாசறைகள்
பரவத் தொடங்கின

வந்த இடத்திலும்
வருணாசிரமமா? என
வாதங்கள் எழுந்தன

அமரத்துவம் எய்திய
ஆம்ஸ்ட்ராங்
ஆங்கிலம் அன்றி
அனைத்தும் அறிந்தவன்

உயர் தமிழிலும்
ஒலிக்கட்டும் அர்ச்சனை
உரிமைக்குரல் ஒலித்தது

அர்த்தம் தொனிக்கும்
தர்க்கங்கள் பிறந்தன

ஆம்ஸ்ட்ராங்
வாகனம் ஏறி
வீற்றிருக்கும்
விக்கிரகங்கள்
நிலாவில்  வந்தது
வீதி உலா

யுகங்கள்
நகர்ந்தன

காலங்கள் மாற
காட்சிகள் மாறின

பூமியோடு ஒருநாள்
போர் மூண்டது

அயல் கிரகத்து
அந்நிய செலவாணி
அடியோடு நிறுத்தப்பட்டது

பூமி புத்திரர்களின்
சகவாசத்தை
பூண்டோடு வெறுத்தனர்

தேச விரோத சக்திகளென
சிலரது சிலைக்கு
சேதம் விளைவித்தனர்

சுதேசி பொருட்களுக்கு மாத்திரம்
சுதந்திரம் தரப்பட்டது

சந்திர புத்திரனாய் இரு
சந்திர பொருள்களையே வாங்கு
சந்திர சந்து பொந்துக்களiல்
சபதங்கள் ஒலித்தன

அதோ
புகைக்கு நடுவே
பூமிவாசியின் கொடும்பாவி
பாதியாய் பாவமாய்
பற்றி எரிந்தது

பூமியிலிருந்து புறப்படும்
வான ஊர்திகளை
வானிலேயே கடத்துவோமென
தீவிரவாதிகள்
தேதி குறித்தனர்

சாதிகள் ஒழிக்க
சங்கங்கள் பிறந்தன

ஆதிகுடிகளுக்கே
முன்னுரிமை என்று
ஆர்ப்பாட்டங்கள் நடந்தன

புதிதாய் வந்த
குடியேறிகளுக்கு
தேநீர்க் கடைகளில்
தகரக் குவளைகள்
விகாரமாய் தொங்கின  

நிலாக்கிணறுகளில்
தண்ணீர் அவர்களுக்கு
தர மறுக்கப்பட்டது

அவர்கள்
புதைக்கவும்
எரிக்கவும்
புறநகருக்கு ஓடினர்

கவிஞர்களின்
புரட்சிக் கவிதைக்கு
புதிய தீனீ கிடைத்தது

சமுதாய மறுமலர்ச்சிக்கு
சரமாரி கவிதைகள்
சளைக்காமல் எழுதினர்.

பூமியில் வசித்த காலத்தை
அசை போட்டது
அவர்களின் மனசு

அது ஒரு
நிலாக்காலம்

சந்தோஷ மனைவி

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 23, 2007 by abdulqaiyum

many-faces.jpg
மனைவி …
படு சந்தோஷம் !

கூரை
சொந்தமாயிருந்து;

கொஞ்சுவதற்கு
மழலையும் இருந்து;

கழுத்திலே நகை;
கையிலே பணம்;

கைப்பிடிக்குள்
கணவன் இருந்தால் ..?

மனைவி .. ..
படு சந்தோஷம் !!!

                          அப்துல் கையூம்
                          vapuchi@hotmail.com
                           10.07.2007

ஒளவை சொன்ன மொழியாம்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 23, 2007 by abdulqaiyum

group.jpg

ஆத்திச் சூடி
ஒளவையே ..!

சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா? என்று
சொல்லாட்சி செய்தவளே..!

காந்தி தேசமென்று
கவிஞன் சொன்னதும்

நீ தானம்மா
என்
நினைவில் வந்தாய்.

அன்று
மகாத்மா காந்தி;

அப்புறம்
இந்திரா காந்தி;

அடுத்து
ராஜிவ் காந்தி

சுட்ட பழங்களாக
அல்லவோ
சுருண்டு விழுந்தார்கள்..?

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com
 

காக்காய்க் கடி

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 23, 2007 by abdulqaiyum

lady-faces.jpg

ஓ நந்தலாலா !

காக்கைச் சிறகினிலே
உன் கருமை நிறம்
கண்ணுக்குத் தெரிந்ததாம்
அந்த கவிராஜனுக்கு.

ஓ ப்ரியசகி !

எனக்கோ … .. ..?

உன்னுடன் நான்
பகிர்ந்துக் கொண்ட

அந்த
காக்காய்க் கடி ..

கடவாய்ப் பல்லில்
காலங் காலமாய்
கனிந்தூறிக்
கொண்டிருக்கும்

அந்த
கமர்க்கட்டு
தித்திப்பு.

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
 

பள்ளித் தோழி

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 23, 2007 by abdulqaiyum

double-faces.jpg 

ஓ தோழி !

அந்த நொண்டியாட்டம்
இன்றுவரை
என் நினைவுகளோடு
முண்டியடித்துக் கொண்டு
ஒன்றாய் வருவதை
நீ அறிய மாட்டாய் ..!

நெற்றிப் பொட்டில்
செங்கல் சில்லை
சமன் செய்து
காயா? பழமா? என்று
கண்ஜாடை செய்வாய்..!

அது காயல்ல ..
கனிந்த நினைவுகள் !!

அப்துல கையூம்

vapuchi@hotmail.com

நினைவுச் சுள்ளிகள்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 23, 2007 by abdulqaiyum

suvadu.jpg 

தனிமை வனாந்திரத்தில்

நினைவுச் சுள்ளிகளை

ஒவ்வொரு குச்சியாய்

உட்கார்ந்து பொறுக்குகிறேன்

சுள்ளிக் கட்டு ..

சுமையாக இருந்தாலும்

சுகமாக இருக்கிறது

பழையன கழிதல்

போகியோடு நிற்கட்டும்

நண்பா !

கடந்த கால நினைவுகளை

கந்தலென

பொசுக்கி விடாதே !

நிரம்பிய உண்டியலை

குலுக்கிப் பார்க்கிறேன்

நினைவுக் காசுகளின்

‘கிளிங்’ ‘கிளிங்’ சப்தம்

அந்த நாள் ஞாபகம் ..

அது ஒரு ஆலமரம்

நினைவுகள் எனக்கு

நிழல் தருகிறது.

இளைப்பாறுகையில்

இளகுகிறது மனம்.

இதயத்தின் இறுக்கம்

இளகுகிறது ஒரு கணம்.

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

ஊசியாய் குத்தும் நூல்

Posted in கையூமின் கவிதைகள் on அக்டோபர் 22, 2007 by abdulqaiyum

lady.jpg

ஒரு
இலக்கிய ரசனை
உடையவனால்தான்
இதுபோன்ற ஒரு படைப்பை
இயற்றிட முடியும் !!!

மெய்யாய்ச் சொன்னால்
உய்…..
நானும் உன்
வாசகன்தான்.

நான் மட்டும்தானா?
ஊஹும்..
நானறியேன் !

உன்
ஒயிலான நடைக்கென்று
ஒரு
வாசகர் வட்டம் !

நீ
வெயிலில் வலம் வந்தால்
இவர்களுக்கு வேர்க்கிறது !

நீ
குடை பிடித்தால்
இவர்கள் நனைகிறார்கள்
மழைச் சாரலில்;
உன்னழகுச் சாயலில் ..

நறுமுகியே..!
நீ
அறிமுகமானதிலிருந்து
பிறமுக மெல்லாம்
வெறும் முகம்தான்

வயப்படுத்தும்
ஒயிலான நடை
உன் நடை !

திரு.வி.க.வின்
தெளிந்த நடையைவிட
திசையிழுக்கும் நடை
உன் நடை !

அண்ணாவின்
அழகு நடையைவிட
அசத்தலான நடை
உன் நடை !

கலைஞரின்
கனிந்த நடையைவிட
கலக்கல் நடை
உன் நடை !

உன்
முகவுரையைக் கண்டு
மோகித்தவன்
நானல்ல ..

உன்
அணிந்துரையைக் கண்டு
அலைபாய்ந்ததல்ல
என் மனம் …

நல்ல
மரபுக் கவிதைக்குப் பிறந்த
புதுக்கவிதை நீ !

இலக்கணமும் நீ
இலட்சணமும் நீ !

இலக்கியமும் நீ
என்
இலட்சியமும் நீ!

உன் உள்ளத்து
உள்ளடக்கம் ..
தன்னடக்கம் ..
எனக்குப் பிடிக்கும்.

உன்
எல்லா பக்கங்களுக்கும்
வாழ்த்துரை
வழங்குவேன் நான்.

உன் மதிப்புரை;
உனக்குத் தெரிய
நியாயமில்லை.

நீ
குறைவாகவே பேசுகிறாய்;
‘ஹைக்கூ’வைப் போல …

உன்
கண்ஜாடை…
கற்பனை விரிக்கிறது;
காட்சிகள் கொடுக்கிறது
படிமங்களைப் போல !

உன்
புன்னகைப் பதிப்புக்கு
விலை மதிப்பில்லை.

படைப்பிலக்கியங்களில்
உன் பெயரை
ஏன் அவர்கள்
போடவில்லை..?
தெரியவில்லை

அனாடமிக்கு
மட்டும்தான்
அகாதெமியோ..?

புத்தகத்திற் கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல
நானும் உன் புன்னகையை
நம்பிகையுடன்
சேமிக்கிறேன்.

என்னுள்ளம் ..
கன்னிமரா நூலகமாய்
விசாலமாக இருந்தாலும்
உன்
ஒரு நூலுக்குத்தான்
இங்கே இட ஒதுக்கீடு !

நீ என்னை
பாராமல் போகும்
ஒவ்வொரு நொடியும்;
ஒரு யுகமெனக்கு;
என்னே ஒரு
ஆச்சர்யக் கணக்கு ?

உன்
சம்மத வரிகளை
ஒரே ஒரு முறை
தனிமையில் எனக்கு
வாசித்துக் காட்டு..

பொன்னியின் செல்வியே..!
நான்
கல்கியாக
அவதார மெடுப்பேன்
உன்னை
என் வாழ்க்கைச்
சரித்திர நாவலாய்
தொகுக்கும் வரை !

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com